செய்திகள்
செய்திகள்
இலங்கையின் 78 வது தேசிய சுதந்திர தினம் 04 பெப்ரவரி 2026 அன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் "இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் கலந்துகொண்டார்.










- விவரங்கள்
Public officers of the Home Affairs Division of the Ministry of Public Administration and the Colombo District Secretariat commenced their duties in the year 2026





- விவரங்கள்
In a significant step toward advancing the government’s Digital Governance policy, the Ministry of Public Administration, Provincial Councils, and Local Government has officially launched an online reservation system for its circuit bungalows and holiday resorts. The inauguration ceremony took place yesterday on 29th of December 2025 at the Ministry auditorium, presided over by Hon. Professor Chandana Abeyratne, Minister of Public Administration, Provincial Councils, and Local Government.
This new facility can be accessed by visiting the Ministry’s official website at www.pubad.gov.lk.
Speaking at the event, the Minister emphasized that the primary objective is to provide citizens with the convenience of booking holiday resorts directly from their mobile phones. He further noted that the Ministry remains committed to strengthening the government's digital transformation by continuously improving services based on public feedback and evolving needs.
The event was attended by Ministry Secretary Mr. S. Alokabandara and several senior staff officers.
-Home Affairs Media Unit-


- விவரங்கள்
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி. ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பொதுச் சேவையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் அதனை ஒரு புதிய பாதைக்கு இட்டுச் செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று தெரிவித்தார்.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, தனது அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவின் பொது அதிகாரிகளுக்கு இலக்கமுறை (டிஜிட்டல்) கையொப்பங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டபோது, 2025 செப்டம்பர் மாதம் 15 ஆந் திகதியன்று இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். மக்கள் எதிர்பார்க்கும் வினைத்திறனான பொதுச் சேவையை உருவாக்குவதே தனது இலக்கு என்றும், இந்த புதிய தொழில்நுட்பம் கிராம உத்தியோகத்தர் மட்டம் வரை நீடிக்கப்பட (விரிவுபடுத்தப்பட) வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ கடமைகளை எளிதாகவும், மிகவும் வினைத்திறனுடனும் செய்வதற்காக, 2006 ஆம் ஆண்டின் இல. 19 இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் (Electronic Transactions Act) பிரகாரம், உள்நாட்டலுவல்கள் பிரிவின் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலக அலுவலகங்களுக்குள் உள்ள அதிகாரிகளின் கையொப்பங்களை இலக்கமுறைமயமாக்கும் (டிஜிட்டல் மயமாக்கும்) செயல்முறை ஆரம்பிக்கப்பட்டது.
இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ், LankaPay நிறுவனமே இலக்கமுறை கையொப்பச் சான்றளிக்கும் அதிகார சபையாகும். இது உத்தியோகபூர்வ கடிதப் பரிமாற்றங்களில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க உதவும், அதன் மூலம் மிகவும் வினைத்திறனான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க சேவையை வழங்கும்
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக்கபண்டார; உள்நாட்டலுவல்கள் பிரிவின் மேலதிக செயலாளர்களான சித்ரா திலகரத்ன, கலாநிதி. ரொஷினி திசாநாயக்க, ஏ.ஜி. நிஷாந்த, தம்மிக முத்துக்கல, ஓமாலி விமலரத்ன; பிரதம நிதி அதிகாரி ஜே.டி.ஏ.பி. ஜயசிங்க; பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் யூ.எல்.ஏ. நாசர்; மற்றும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கீகனகே ஆகிய பல முக்கிய அதிகாரிகளும், உள்நாட்டலுவல்கள் பிரிவின் பல ஊழியர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
- உள்நாட்டலுவல்கள் ஊடகப் பிரிவு -






- விவரங்கள்




