தகவல்களுக்கான கோரிக்கைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைமுறை
தகவல்களுக்கான கோரிக்கைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைமுறை
சட்டம் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் எண் 12 - 2016
விதிமுறைகள் - அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2004-66 திகதி 2017.02.03
பொது அதிகாரசபை - உள்துறை அமைச்சகம் மற்றும் இணைந்த நிறுவனங்கள்
மேற்கண்ட சட்டத்தின் கீழ் உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக விண்ணப்ப எண் சுவுஐ1 ஐப் பயன்படுத்தி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அதிகாரியிடம் தகவல்களைக் கோரலாம். இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது கட்டாயமில்லை.
தகவல் அலுவலர்
![]() |
திருமதி. ஜி.சி.எஸ். திலகரத்ன : +94 112 050 320 [Ext: 1400] |
![]() |
வெற்றிடம் +94 112 050 350 [Ext: 1312] |
![]() |
திரு. தம்மிக்க முதுகல +94 112 050 380 [Ext: 1415] |
![]() |
கலாநிதி. ரொஷினி திசாநாயக்க +94 112 050 430 [Ext: 1700] |
![]() |
திரு.எம்.ஆர்.பி. பெரேரா +94 112 050 351 [Ext: 1300] |
தகவலுக்காக விண்ணப்பித்தல்
தகவலுக்காக விண்ணப்பித்தல்
- தகவல்களுக்கான கோரிக்கைகளை படிவம் RTI 01 இல் விதித்துரைக்கப்பட்டவாறு பூர்த்தி செய்யப்பட்டு பின்வரும் தகவல் அலுவலரிடம் கையளிக்கப்படுதல் வேண்டும். வாய்மொழி மூலமாக அல்லது எழுத்தில் தகவல்களுக்கான கோரிக்கையைச் சமர்ப்பித்தலும் தகவல் அலுவலரிடமிருந்து எழுத்திலான ஏற்பொன்றைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
-
தகவல்களை வழங்குவதா அல்லது இல்லையா என்னும் தீர்மானம் முடியுமானவரை விரைவில், எவ்வாறாயினும் 14
நாட்களினுள், வழங்கப்பட வேண்டும். -
தகவல்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டால், தகவல்களுக்கான உரிமை ஆணைக்குழுவினால் விதித்துரைக்கப்பட்ட கட்டண அட்டவணைக்கு இணங்க கட்டணம் ஒன்றைச் செலுத்தியதும் தகவல் வழங்கப்படும் என கோரிக்கையை விடுத்த பிரஜைக்கு தகவல் அலுவலர் தெரிவிப்பார். தகவல், கட்டணம் ஒன்றின் கொடுப்பனவுக்கு உட்படுமாயின், கொடுப்பனவை மேற்கொண்டு 14 நாட்களினுள் தகவல் வழங்கப்படுதல் வேண்டும். கட்டணம் ஒன்றைச் செலுத்த வேண்டிய தேவை இல்லையாயின், தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு 14 நாட்களினுள் தகவல் வழங்கப்படும்.
-
கட்டணத்தைச் செலுத்திய பின்னர் 14 நாட்களினுள் தகவல்களை வழங்க முடியாதாயின், தகவல்களை வழங்குவதற்கு -
ஆகக்கூடியது 21 நாட்கள் வரை - மேலும் காலம் நீடிக்கப்படும் என நீடிப்புக்கான காரணங்களை வழங்கி தகவல்களைக் கோரிய
ஆளுக்குத் தெரிவிக்கப்படும் -
கோரிக்கை ஒரு பிரஜையின் வாழ்க்கை மற்றும் சொந்தச் சுதந்திரத்துடன் தொடர்பானதாக இருக்கும் போது தகவல் அலுவலர் 48
மணித்தியாலங்களுக்குள் வேண்டுகோளுக்கான பதில் ஒன்றை வழங்குதல் வேண்டும். -
பின்வரும் சந்தர்ப்பங்களில் மேன்முறையீடு ஒன்று மேற்கொள்ளப்படலாம்.
- தகவலுக்காக வழங்கப்பட்ட கோரிக்கை ஒன்றை தகவல் அலுவலர் மறுத்தல்
- பிரிவு 5 இன் கீழ் அத்தகைய தகவல்களை வழங்குதல் விலக்களிக்கப்பட்டுள்ளது என தகவலைப் பெற அணுகுவதற்கு
தகவல் அலுவலர் மறுத்தல் - சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட கால வரையறைக்கு இணங்கி ஒழுகாமை
- தகவல் அலுவலர் பூரணமற்ற, தவறாக இட்டுச் செல்லும் அல்லது பொய்யான தகவல்களை வழங்கியிருத்தல்
- தகவல் அலுவலர் மேன்மிகையான கட்டணங்களை விதித்திருத்தல்
- கோரப்பட்ட வடிவத்தில் தகவலை வழங்குவதற்கு தகவல் அலுவலர் மறுத்திருத்தல்
- தகவலுக்காக அணுகுவதிலிருந்தும் தன்னைத் தடுப்பதற்காக தகவல் உருக்குலைக்கப்பட்டுள்ளது, அழிக்கப்பட்டுள்ளது
அல்லது தவறாக இடப்பட்டுள்ளது என கோரிக்கையை விடுக்கும் பிரஜை நியாயமான ஏதுக்களைக் கொண்டிருத்தல்
குறித்தளிக்கப்பட்ட அலுவலர்
![]() |
திரு. எஸ். ஆலோக்க பண்டார +94 11 2695738 |
தகவலுக்கான உரிமை விண்ணப்பப் படிவங்கள்
தகவலுக்கான உரிமை விண்ணப்பப் படிவங்கள்
- தகவல்களைப் பெறுவதற்கான விண்ணப்பம்
விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும் - குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கான மேன்முறையீடு
விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்









