இலங்கையின் 77 வது தேசிய சுதந்திர தினம் 04 பெப்ரவரி 2025 அன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் “தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டது. அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வானது கௌரவ பிரதமர், சர்வமத தலைவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சர்கள், இராணுவ அதிகாரிகள், சிவில் உயரதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.